RSS

இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 2 விவசாயிகள் தற்கொலை


கடந்த இருபது ஆண்டு காலமாக ஆட்சியாளர்கள் கடைப்பிடித்து வரும் நவீன தாராளமயக் கொள்கைகள் கடும் விவசாய நெருக்கடியை உருவாக்கியுள் ளன. 11ஆவது ஐந்தாண்டுத் திட்டக் காலமான2007-12இல் விவசாய வளர்ச்சி விகிதத்திற்கு 4 விழுக்காடு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அது சுமார் 3 விழுக்காடு அளவிற்குத்தான் இருந்திருக்கிறது. முந்தைய எட்டு ஆண்டுகளில் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதைவிட, கடந்த எட்டு ஆண்டுகளில் விவசாயிகள் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய குற்றப் பதிவுறுக்கள் பீரோ  பதிவு செய்திருக்கிறது. 2003-10ஆம் ஆண்டுகளில் சுமார் 1 லட்சத்து 35 ஆயிரத்து 756 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 1995-2002இல் 1 லட்சத்து 21 ஆயிரத்து 157 பேர் தற் கொலை செய்து கொண்டுள்ளனர். அதாவது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 2 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
மேற்குவங்கம், கேரளம் ஆகிய மாநிலங்களில் இடது முன்னணி ஆட்சிகள் இல்லாத நிலையில், அங்கேயும் விவசாய நெருக்கடியின் காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது என்பது தொடங்கியிருக்கிறது. கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சிக்காலத்தில், விவசாயிகள் தற்கொலை என்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருந்தது. இப்போது ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு வந்தபின் கடந்த ஓராண்டில் சுமார் 50 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபின் இதுவரை 54 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஆட்சியாளர்கள், விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை வாங்க மறுத்ததன் காரணமாகவும், புதிய கடன் வலைகளில் அவர்கள் சிக்கியுள்ளதன் காரணமாகவும் தற்கொலைகள் நடைபெற்றுள்ளன. ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது என்பது தொடர்வதுடன், அதிகரித்தும் உள்ளது.
ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கத்தின் இந்த ஆண்டு பட்ஜெட், விவசாயிகளைக் கடுமையாகத் தாக்கியுள்ளது. அதிலும் குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மிகவும் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளனர். எரிபொருள்களுக்கு அளித்து வந்த மானியத்தில் சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் மற்றும் ரசாயன உரங்களுக்கு அளித்து வந்த மானியத்தில் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் வெட்டப்பட்டிருக்கிறது. இதனுடன் பெட்ரோலியப் பொருட்களின் விலை தொடர்பாக இருந்து வந்த கட்டுப்பாடுகளை நீக்கியதன் காரணமாக, வெளிச்சந்தையில் எரி பொருள்கள் மற்றும் ரசாயன உரங்களின் விலைகள் விண்ணை எட்டியுள்ளன. இதனால் விவசாயிகள் மேலும் கடுமையான முறையில் வறிய நிலைக்குத் தள்ளப் பட்டிருப்பதுடன், விவசாயத்திற்காக வாங்கிய கடன்களைக் கட்ட முடியாமல் கடன்வலையிலும் அவர்களைத் தள்ளி விட்டுள்ளது. விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓரளவுக்கு நிவாரணம் அளித்து வந்த மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்பு உத்தரவாதத் திட்டச் செலவினத்தில் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் வரையிலும் குறைத்திருப்பதன் காரணமாக, விவசாயத் தொழிலாளர் மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு வேலைகளும் குறைக்கப்பட்டுவிட்டது.
ஆனால் அதே சமயத்தில் ஐ.மு.கூட் டணி-2 அரசாங்கமோ, கார்ப்பரேட்டுகளுக்கு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கியுள்ளது. கார்ப்பரேட்டுகளுக்கு 5 லட்சத்து 29 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வரிச்சலுகைகளை வழங்கியிருக்கிறது. 2004இலிருந்து இதுவரை அவர்களுக்கு அளித்துள்ள வரிச்சலுகைகள் 26 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாகும்.

 

குறிச்சொற்கள்:

மின் கட்டனமும் இனி சர்வதேச சந்தை விலையில்


ஐ.மு.கூட்டணி அரசு மின் கட்டணங்களைக் கூட சர்வ தேச அளவிற்கு மாற்ற வேண்டும் என மத்திய அரசு சிந்தித்து வருகிறது. மின் சக்திக்கான எரிபொருட்களின் சர்வ தேசச் சந்தை விலை உயர்ந்து விட்டால் மின் கட்டணம் உயரும் என்பது அதன் பொருள். மின்சக்தி உற்பத்தியில் நிலக்கரி, பெட்ரோல், டீசல், யுரேனியம் என எதுவும் எரிபொருளாக இருக்க முடியும். இவற்றின் சர்வதேசச் சந்தை விலை உயரும் போதெல்லாம் மின் கட்டணம் உயரும் என்றால் என்ன ஆகும் என்பது குறித்து சிந்திப்பது அவசியம்.அடுத்து வரும் மாதங்களில் இதற்கான கொள்கை மத்திய அரசு வெளியிட தயாராக இருக்கிறது. 

 

குறிச்சொற்கள்: , , ,

பெட்ரோல் மத்திய அரசின் பெட்ரோல் பொய் கணக்கு


கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 12 முறைக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டிருக்கின்றன. போகிற போக்கைப் பார்த்தால் அடுத்தடுத்து விலை உயர்வு இருக்கும் என்றே தெரிகிறது. அதனால் வரிகள், அரசு நிறுவனங்களின் லாப ஈட்டுத்தொகை என அரசு கஜானாவில் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டப் போகிறது.

இதில் மக்களின் நிலைமை வேடிக்கையானது. விலை உயர்வு அறிவிக்கப்பட்டவுடன் கடுமையாக எதிர்ப்புத் தெரிவிப்பார்கள். எல்லாம் சில நாள்கள்தான். அதற்குள் இன்னொரு விலை அறிவிப்பு பற்றி அரசு பேசத் தொடங்கும். உடனே பெட்ரோல் விலையை உயர்த்தக்கூடாது என்று மக்கள் மத்தியில் ஆவேசம் கிளம்பும். ஆட்சியாளர்கள் எதையும் பொருள்படுத்தமாட்டார்கள். தங்கள் இஷ்டப்படி விலையை உயர்த்துவார்கள். பிறகு இன்னொரு போராட்டம், இன்னொரு விலை ஏற்றம். இதுதான் நம் நாட்டு அப்பாவிகளின் நிலை.

பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் எண்ணெய் நிறுவனங்களிடம் அரசு ஒப்படைத்துவிட்டது. அடுத்தடுத்து என்னென்ன பொருள்களையெல்லாம் இப்படி ஒப்படைக்கலாம் என நேரம் பார்த்து வருகிறது.

ஒரு கட்டத்தில் எல்லா பெட்ரோலியப் பொருள்களின் விலை நிர்ணயத்தையும் எண்ணெய் நிறுவனங்களிடம் கொடுத்து விடுவதுதான் அரசின் திட்டம். இதன் பிறகு சந்தை நிலவரத்துக்கு ஏற்ப விலைகள் நிர்ணயிக்கப்படும்.

பெட்ரோலியப் பொருள்களின் விலை நிர்ணயத்திலிருந்து ஒதுங்கிக் கொள்வதை அரசு பல்வேறு வகையிலும் நியாயப்படுத்த முயற்சிக்கிறது. கச்சா எண்ணெய் விலையில் ஏற்ற இறக்கம், எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் நஷ்டம், அரசின் மானியச் சுமை, நிதிப் பற்றாக்குறை என என்னவெல்லாமோ காரணங்கள் சொல்லப்படுகின்றன.

இப்போது அரசுக்குப் புதிய காரணம் கிடைத்திருக்கிறது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்துவிட்டதால் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்திருப்பதாக அரசு கூறுகிறது. ரூபாயின் மதிப்புக் குறையைக் குறைய, உள்நாட்டு டீசல், பெட்ரோல் விலையில் பாதிப்பு ஏற்படும் என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி கூறினார்.

ஒரு டாலருக்கு ஒரு ரூபாய் அதிகம் செலுத்த வேண்டும் என்றால், ஆண்டுக்கு ரூ.8 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார். அவரது கணக்குப்படி நாளொன்றுக்கு ரூ.271 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.

ஒரு வகையில் பார்த்தால் இது நியாயமானதாகத் தோன்றும். ரூபாயின் மதிப்பு குறைகிறதென்றால், டாலரின் மதிப்பில் கச்சா எண்ணெய்க்கு நாம் கூடுதல் விலை கொடுத்தாக வேண்டும். அதனால் நஷ்டம் ஏற்படுவது உறுதி. இதைப் பற்றிப் புரிந்து கொள்வதற்கு ஓராண்டின் இறக்குமதிக் கணக்கை எடுத்துக் கொள்வோம்.

2010-11 நிதியாண்டுக்கான இந்தியப் பொருளாதாரம் பற்றி ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரப் புத்தகத்தில், 1,06,068 டாலர் மதிப்புக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நாட்டின் ஒட்டுமொத்த இறக்குமதி மதிப்பில் இது 30 சதவீதம். அப்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.45.5. இதைக் கொண்டு கணக்கிட்டால் கச்சா எண்ணெய் இறக்குமதி மதிப்பு ரூ.4,82,714 கோடிக்குச் சமம்.

இப்போது ஒரு டாலருக்கு ரூ. 50 என்கிற அளவுக்கு ரூபாய் மதிப்பு குறைந்துவிட்டது. இந்த மதிப்பைக் கொண்டு 2010-11 நிதியாண்டின் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் கணக்கிட்டால் ரூ.5,30,340 கோடி என வரும். அதாவது ரூபாயின் மதிப்பு குறைந்திருப்பதால் கூடுதலாக ரூ.47,626 கோடி செலவாகிறது என்று அர்த்தமாகிறது. ஆனால் கச்சா எண்ணெயின் சந்தை விலை மாறாமல் இருந்ததால்தான் இந்தக் கணக்கு சரி. ஆனால், அப்படியிருப்பதில்லை. கச்சா எண்ணெய் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுகிறது.

2009-10-ம் நிதியாண்டில் 66.76 டாலராக இருந்து ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் இப்போது 111 டாலருக்கு உயர்ந்திருக்கிறது என்பது பெட்ரோலிய அமைச்சரின் கருத்து. ரூபாய் மதிப்பு சரிந்ததன் காரணமாக ஏற்பட்ட இழப்பைக் காட்டிலும் இந்த விலை உயர்வால் ஏற்படும் நஷ்டம் பல மடங்கு அதிகமாக இருக்கும். இதனால்தான் பெட்ரோலியப் பொருள்களின் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படுகிறது என்று அரசு கூறிக் கொண்டிருக்கிறது.

ஆனால், இந்த விளக்கம் முழுமையானதல்ல. சில உண்மைகள் வேண்டுமென்றே மறைக்கப்படுகின்றன. பெட்ரோலியப் பொருள்களை விற்பதால் எண்ணெய் நிறுவனங்களுக்கும் அரசுக்கும் பெருத்த நஷ்டம் ஏற்படுவதைப்போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே இந்த உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன.

ரூபாய் மதிப்பு சரிந்தால் எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதை மட்டும்தான் அரசு கூறுகிறது. ஆனால் இதில் லாபமும் இருக்கிறது. இறக்குமதியில் நஷ்டம் ஏற்படுகிறதென்றால், ஏற்றுமதியில் லாபம் ஏற்படுகிறது என்பதுதான் உண்மை.

இந்தியாவின் கச்சா எண்ணெய்த் தேவையில் 70 சதவீதம் அளவுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. அதே நேரத்தில் பலவகைப் பெட்ரோலியப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்பதும் உண்மை. ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரங்களின்படி, 2010-11-ம் நிதியாண்டில் இந்தியா 41,918 கோடி டாலர் மதிப்பிலான பெட்ரோலியப் பொருள்களை ஏற்றுமதி செய்திருக்கிறது. நாட்டின் மொத்த ஏற்றுமதியில் இது 16.53 சதவீதம். ரூ.45.5 என்கிற பரிமாற்று மதிப்பில் இது ரூ.1,90,781 கோடிக்குச் சமம். ரூ.50 என்கிற பரிமாற்றுப் மதிப்பில் கணக்கிட்டால் ரூ.2,09,590 கோடி. ஆக, ரூ.18,809 கோடி அதிக லாபம் கிடைக்கும்.

இதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டால் பெட்ரோலியப் பொருள்களின் விற்பனையால் ஏற்படும் இழப்பாக அரசு குறிப்பிடும் மதிப்பு வெகுவாகக் குறைந்துவிடும்.

பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ஏற்படும் லாபம் அல்லது நஷ்டத்தை நிர்ணயிப்பதில் வேறு சில காரணிகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆனால், நஷ்டக் கணக்கு காட்ட வேண்டும் என்பதிலேயே முனைப்புடன் பணியாற்றிக் கொண்டிருப்போர் இதை வசதியாக மறந்துவிடுகின்றனர். உதாரணத்துக்கு நாட்டின் கச்சா எண்ணெய்த் தேவையில் 30 சதவீதம் உள்நாட்டிலேயே கிடைக்கிறது. இதை யாரும் கணக்கில் கொள்வதில்லை.

இவை எல்லாவற்றையும் மதிப்பிட்டால் பெட்ரோலியப் பொருள்களின் விற்பனையால் எண்ணெய் நிறுவனங்களும், அரசும் கொள்ளை லாபம் அடைவதைக் கண்டறிய முடியும்.

இதற்கு முந்தைய பல கட்டுரைகளில் கூறியதைப் போல, எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது என்பதெல்லாம் சுத்தப் பொய். 3 எண்ணெய் நிறுவனங்களுக்கும் நல்ல லாபம் கிடைக்கிறது. 2006-07 முதல் 2009-10 வரையிலான 4 நிதியாண்டுகளில் இந்த 3 நிறுவனங்களும் ரூ. 36,653 கோடி லாபம் அடைந்திருக்கின்றன. மத்திய அரசுக்கு ரூ.4,73,000 கோடி லாபம் கிடைத்திருக்கிறது. விற்பனை வரி போன்றவை மூலமாக மாநில அரசுகளும் ஆதாயம் அடைகின்றன.

இந்த 4 நிதி ஆண்டுகளில் பெட்ரோலியப் பொருள்களுக்காக வழங்கப்பட்ட மொத்த மானியமே ரூ.26,000 கோடிதான். மொத்த வருவாயில் இது 6 சதவீதத்துக்கும் குறைவு. நஷ்டம் ஏற்படுவதாக, அரசும் எண்ணெய் நிறுவனங்களும் ஒப்பாரி வைத்தாலும், அவர்களுக்கு லாபம் கிடைக்கிறது என்கிற உண்மையை எந்தப் போர்வைக்குள்ளும் மூடிவிட முடியாது.

இதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் எண்ணெய் நிறுவனங்களின் வருடாந்திரக் கணக்கு அறிக்கைகள் அமைந்திருக்கின்றன. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 2010-11ம் ஆண்டுக்கான அறிக்கையில், அந்த நிறுவனத்துக்கு வரிப்பிடித்தங்கள் போக ரூ.7,445 கோடி லாபம் அடைந்திருப்பதைக் காண முடியும்.

இந்த நிறுவனம் அரசுக்கு லாப ஈவுத் தொகையாக மட்டும் ரூ.39,658 கோடியைக் கொடுத்திருக்கிறது. பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற நிறுவனங்களும் பல ஆயிரம் கோடி லாபம் ஈட்டியிருக்கின்றன.

இவையனைத்தையும் வைத்துப் பார்த்தால், பெட்ரோலிய விற்பனையால் நஷ்டம் ஏற்படுவதாக அரசும் எண்ணெய் நிறுவனங்களும் கூறி வருவது மக்களைத் திசை திருப்பும் முயற்சி என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இதன் பிறகும் விலையை ஏற்றுவதற்கே அரசு தருணம் பார்த்துவருகிறதே தவிர, விலையைக் குறைப்பது பற்றிச் சிந்திக்கவே இல்லை.

நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்த வண்ணமே இருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் பெட்ரோலிய விலை உயர்வுதான். அத்தியாவசியப் பொருள் ஒவ்வொன்றின் விலையிலும் அதன் சரக்குக் கட்டணத்துக்கு குறிப்பிட்ட பங்களிப்பு இருக்கும். அந்த வகையில் பெட்ரோலிய விலையை உயர்த்தினால், பொருள்களின் விலை உயரும். அதுவே பணவீக்கம் அதிகரிப்பதற்கும் காரணமாக அமையும்.

இந்த ஒரேயொரு காரணத்துக்காகவாவது பெட்ரோலியப் பொருள்களின் விலையை உயர்த்துவது பற்றி அரசு பரிசீலனை செய்ய வேண்டும். ஆனால், லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இயங்கும் அரசின் செவிகளை அது எட்டவில்லை.

நாட்டு மக்களின் நலன் ஒன்றே குறிக்கோள் என முழங்கிக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களுக்கு, உண்மையிலேயே அந்த அக்கறை இருக்குமானால், பெட்ரோலியக் கொள்கையை மாற்றி அமைக்க வேண்டும். எல்லாவற்றிலும் லாபம் பார்த்துவிட வேண்டும் என்கிற வியாபார மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். இதெல்லாம் முடியாதென்றால், லாபத்தை பையில் போட்டுக் கொண்டு, நஷ்டம் ஏற்படுகிறது என்று போலியாகப் புலம்புவதையாவது நிறுத்திக் கொள்ள வேண்டும். பாவம் மக்கள்!

நன்றி: தினமணி பி.எஸ்.எம். ராவ்

 

குறிச்சொற்கள்:

டிராபிக் ராமசாமி என்ற அய்யோக்கியன்


டிராபிக் ராமசாமியைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சென்னையைச் சேர்ந்தவரான டிராபிக், பல நல்ல பொது நலன் மனுக்களை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்து மக்களுக்கு பல பேருதவிகளைச் செய்தவர்.

அப்படியாப்பட்ட டிராபிக் ராமசாமி தற்போது நித்தியானந்தாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். சமீபத்தில் மதுரை ஆதீன மடத்திற்கு விசிட் அடித்த அவர் அங்கு நித்தியானந்தாவை புகழ்ந்து பேசியுள்ளார். 

இதுகுறித்து அவரிடம் கேட்டால், விவேகானந்தவர் மிகவும் தைரியமானவர். அவருக்குப் பிறகு அந்தத் தைரியத்தை நித்தியானந்தாவிடம்தான் பார்க்கிறேன். 100 இளைஞர்களைக் கொடுங்கள், இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன் என்று கூறியவர் விவேகானந்தர். அதேபோல நித்தியானந்தவிடம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர். பிறகு ஏன் நீத்தியால் இந்தியாவை மாற்ற முடியவில்லை? ஒரு வேலை எண்ணிக்கை அதிகம் போலும். அவரது செயல்களில் நம்பிக்கை ஏற்பட்டதால்தான் அவரை விவேகானந்தருடன் ஒப்பிட்டுப் பேசினேன் என்றார். ஐயா உங்கள்  நீத்தி போல்  ஒரு போதும் விவேகானந்தவர்  பாலியல் வழக்கில் சிக்கியத்தில், ஆடி காரில் ஊர் சுற்றியத்தில் இல்லை, தன்னை சுற்றி எப்போதும் பெண்கள் கூட்டத்தை வைத்துக் கொண்டது இல்லை தனக்கு என்று சொந்தமாக சொத்து சேர்த்தது கிடையாது.

மேலும் அவர் கூறுகையில், மதுரை ஆதீனத்திற்கு பல கோடி சொத்துக்கள் உள்ளன. அதை சில சுயநலவாதிகள் அனுபவித்து வருகிறார்கள்.சரி அப்படி என்றால் நீத்தியிடம் உள்ள சுமார் 2000 கோடி உள்ள சொத்துக்கள் அவர் எப்படி சம்பாதித்தார் அதை பற்றி நீங்கள் சொல்லுவீர்களா?  அவர்களிடமிருந்து சொத்துக்களை நித்தியானந்தா மீட்டு விடுவார் என்று பயந்துதான் அந்த சுயலவாதிகள் தூண்டுதலின் பேரில் நித்தியானந்தாவுக்கு எதிரான போராட்டங்கள் தூண்டி விடப்படுகின்றன என்று கூறுகிறார் டிராபிக்.

சரி நித்தியானந்தா மீது பாலியல் வழக்குகள் உள்ளனவே என்ற கேள்விக்கு, அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மீதும்தான் இருக்கிறது. மேலும் நித்தியானந்தா மீதான பாலியல் புகார்கள் நிரூபிக்கப்படவே இல்லையே என்றார் டிராபிக். ஐயா வழக்கு உன்னாம் முடியவில்லை, தீர்ப்பும் வரவில்லை அதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் 

 

குறிச்சொற்கள்:

மநுவின் வாரிசுகள்


“நாங்கள் வித்தியாசமான கட்சி” என்று ஓயாது பீற்றிக்கொள்ளும் பாஜகவின் லட்சணம் மேலும் மேலும் அம்பலப்பட்டு வருகிறது. கர்நாடகாவின் சட்டமன்றத்தில் மிக முக்கியமான பிரச்சனையை விவாதித்துக் கொண்டிருக்கிறபோது மூன்று பாஜக அமைச்சர்கள் அலை பேசியில் ஆபாசப் படம் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சில தொலைக்காட்சிகள் அந்தக் காட்சியை அப்படியே ஒளிபரப்பி விட்டன.நாடே கொந்தளிக்கிறது. வேறு வழியில்லாமல் கர்நாடக பாஜகவைச் சேர்ந்த கூட்டுறவு அமைச்சர் லட்சுமண் சவதியும், மகளிர்- குழந்தைகள் நல அமைச்சர் சி.சி. பாட்டீலும், விளையாட்டுத் துறை அமைச்சர் கிருஷ்ண பலேமரும் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். பண்பாட்டைப் பற்றி வாய்கிழியப் பேசும் பாஜகவின் முகமூடி மட்டுமல்ல உடை முழுமையுமே கழன்று விழ நாட்டு மக்கள் முன்னால் நிர்வாணமாய் நிற்கிறது.

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தன் மனைவி என்று சொல்லி இன்னொருவர் மனைவியை கூட்டிக்கொண்டு போன அசிங்கம் ஏற்கெனவே அரங்கேறி நாடே காறித் துப்பியது. பொதுவாக பாஜகவை காவிக்கட்சி என கூறுவது வழக்கம். ஆசிரமங்களில் சில போலிச்சாமியார்கள் நடத்துகிற காமக்களியாட்டங்கள் வீடியோ காட்சிகளாய் நாட்டையே உறை யவைத்ததுபோல் காவிக்கட்சியும் தன் பங்கை நிறைவேற்றி இருக்கிறதோ?

காதலர் தினத்தன்று இளைஞர்கள் கொண்டாடுவதை பண்பாட்டு விரோதம் என்று கூப் பாடு போட்டு காதல் ஜோடிகளை தாக்குகிற அயோக்கியத்தனம் கர்நாடகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அரங்கேறும். ஒருமுறை காதல் ஜோடிகளை கட்டாயமாக திருமணம் செய்து வைக்கிறோம் என இந்தக் காலிக்கூட்டம் களத்தில் இறங்கியது. பூங்காவில் பேசிக்கொண்டிருந்த அண்ணன்- தங்கையை கட்டாயத் தாலி கட்ட வைத்த அராஜகத்தை மறந்துவிட முடியுமா? இந்த ஆண்டும் அந்த ‘ராமர்சேனை’ தன் கரசேவையைத் தொடங்கிவிட்டது.

கல்லூரி மாணவிகள் உடை உடுத்துவதில் கூட நாங்கள் சொல்வதைத்தான் கேட்க வேண்டும் என இந்தக் காலி(வி)க்கூட்டம் செய்கிற அழிச்சாட்டியம் கொஞ்சமல்ல. இப்போது இவர்களுடைய முழு யோக்கியதையும் கண்டு நாடே சிரிக்கிறது.

அதுமட்டுமல்ல, ஊழலைப் பற்றி இவர்கள் உரக்கப் பேசுவார்கள். ஆனால் பங்காரு லட்சுணன் முதல் கர்நாடக ரெட்டி சகோதரர்கள் வரை பாஜகவுடைய இரட்டை வேடத்தை ஊரறிய படம்பிடித்துக் காட்டிக்கொண்டிருக்கின்றனர். மதவெறியும், பதவிவெறியும், பணவெறியும், ஒழுக்கக் கேடுகளும் மிகுந்தவர்களுடைய கூடாரம்தான் பாஜக என்பதை ஒவ்வொரு சம்பவமும் நாட்டுக்கு நிரூபித்துக் கொண்டிருக்கிறது. பொருளாதாரக்கொள்கையிலும் எந்த விதத்திலும் மாற்றுக்கொள்கை இல்லை. சமூகத் தளத்திலும் மிகவும் பிற்போக்கானவர்களே இவர்கள். பெண்களை வெறும் போகப் பொருளாகவும் ஆணின் அடிமைகளாகவும் பார்க்கிற சனாதன மநுவின் பார்வைதான் இவர்களின் அடிப்படைக் கோட்பாடு என்பதால், இவர்கள் ஆசிரமத்தில் இருந்தாலும் ஆட்சியில் இருந்தாலும் ஆபாசப்படம் பார்ப்பதில் ஆச்சரியமில்லை. ஏனெனில், இந்த பஞ்சாங்கத்தனம் அவர்கள் ரத்தத்திலேயே ஊறியவை. மக்கள் இந்த ‘யோக்கிய சிகாமணிகளை’ அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். வெறுத்து ஒதுக்க வேண்டும்.

 

குறிச்சொற்கள்:

மருந்து நிறுவனங்களின் பகல் கொள்ளை


சமீபத்தில் உச்சநீதிமன்றம், மக்கள் பயன்படுத்தும் அனைத்து அத்தியாவசிய மருந்துகள் மத்திய அரசின் விலைக் கட்டுப் பாட்டுக்குள் இருக்கின்றனவா என்றும் ஏழை, எளிய மக்கள் வாங்கி பயன்படுத்தும் வகையில் உள்ளனவா என்றும் மத்திய அரசை வினவியுள்ளது. இதுநாள் வரையில் மத்திய அரசும், பெட்ரோலியத்துறை அமைச்சகமும் இதன்மேல் மௌனம் சாதித்து வருகின்றன. அப்படியென்றால் மருந்துகளின் விலைகள், நிர்ணய விலைக் கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்றும் அதை கட்டுப்படுத்திட மத்திய அரசு எவ்வித முயற்சியும் எடுத்திட வில்லை என்று தான் அர்த்தமாகும்.

இந்நிலையில் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் வானளாவிய உயரத்தில் உயர்ந்துகொண்டிருக்கும் வேளை யில் மருந்துகளின் விலைகள் என்பது விஷம்போல் ஏறிக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு இந்தியன் வருமானத்தில் மருந்துகளின் செலவு என்பது மாதாமாதம் உயர்ந்து கொண்டி ருக்கிறது. இந்திய அரசின் 2004-05 அறிக்கையின்படி தனி மனித செலவீனத்தில் மருத்துவத்திற்காக கிராமங்களில் 7 சத வீதமும் நகரங்களில் 5 சதவீதமும் செலவிடப்படுகிறது. 2010-11ல் இதில் குறைந்த பட்சம் 150-200 சதவீதம் வரை உயர்ந்திருக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடைப்பிடிக்கும் தாராளமயக் கொள்கையின் விளைவாக, மருந்துத் துறையில் 100சதவீதம் அந்நிய மூலதனம் அனுமதித்ததன் காரணமாக பல பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களை கபளீகரம் செய்து வருகின்றன. இதனால் இந்திய மருந்துத் துறையில் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகமாகி, இந்திய மக்களை, தொழிலாளர்களை வஞ்சித்து வருகின்றது. இதை தடுத்திட வேண்டுமென்று இந்திய மருந்து நிறுவனங்களின் கூட்டமைப்பும் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. மருந்து சந்தையை பன்னாட்டு நிறுவனங்களுக்கு திறந்துவிட்டு, விலைகள் குறைய வேண்டுமென்றால் சாத்தியமே இல்லை.

348 மருந்துகளை அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் மத்திய அரசு சேர்த்துள்ளது. ஆனால் 37 மருந்துகள் மட்டும்தான் விலைக் கட்டுப்பாட்டு பட்டியலில் உள்ளன. மற்ற 311 மருந்துகளும் மருந்து நிறுவனங்களின் லாபவெறிக்கு விட்டு விட்டது. இதனால் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தத்திற்கான மருந்து மற்றும் உயிர்காக்கும் மருந்துகளின் விலைகள் தாறுமாறாக உயர்ந்துள்ளன.

மேலும் கே.ஸ்ரீநாத் தலைமையிலான திட்டக் குழுவின் மக்கள் நலன் உபகுழு தனது அறிக்கையில், “மருந்துகளின் விலை நிர்ணயத்தில் இந்திய அரசின் மெத்தனப் போக்கை பன்னாட்டு நிறுவனங்கள் தனதாக்கிக் கொண்டு மருந்துகளை அதிக பட்சமாக விலை உயர்த்தி தனது லாபத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

இந்த விலை உயர்வுக்கு காரணம்தான் என்ன?

1. மருந்து நிறுவனங்களின் லாப வெறிதான் காரணம். தயாரிப்பு விலைகளிலிருந்து பல நூறு மடங்கு வரை அதிகபட்ச விலை (M.R.P) வைத்து நோயாளி தலையில் கட்டுகிறது. நோயாளியும் தன் உயிர் பாதுகாப்பிற்காகவும், நலனிற்காகவும் தன் உடமைகளையெல்லாம் விற்று அதில் குறிக்கப்பட்டுள்ள விலைக்கு வாங்கிச் செல்ல வேண்டியுள்ளது. வேறு வழியில்லை!

2. மருந்து நிறுவனங்கள் தங்கள் மருந்துகளை பரிந்துரை செய்திட மருத்துவர்களுக்கு அன்பளிப்பு, உபசரிப்பு என்கின்ற தரக் குறைவான யுக்திகளை கையாளுகின்றது.

உதாரணம்: குடல் புண்ணிற்கான ராணிடின் மருந்து தயாரிக்கும் மருந்து நிறுவனம் கடந்த ஜூன் மாதத்தில் 2.33 கோடி ரூபாய் செலவு செய்து 466 மருத்துவர்களை துபாய்க்கு உல்லாச பயணம் ஏற்பாடு செய்திருக்கின்றது. அதேபோன்று  எனும், அல்சர் மாத்திரையை பரிந்துரைத்திட மருத்துவர்களுக்கு சராசரியாக ரூ. 1.50 லட்சம் செலவு செய்துள்ளது. அது மட்டுமல்ல, தங்க நாணயங்கள், வெள்ளிக் காசுகள், தொலை காட்சிப் பெட்டிகள், விலை உயர்ந்த ப்ளாக் பெர்ரி செல்போன்கள் என அள்ளிவீசியுள்ளது.

மருத்துவர்களுக்கு மருந்து நிறுவனங்கள் கொடுக்கும் பணம் அனைத்தும் இறுதியாக நோயாளிகளின் தலையில் தான் விழுகின்றது. குறிப்பாக உயிர்காக்கும் மருந்தான மெரோபனம் எனும் மருந்தின் அதிகபட்ச விலை ரூ. 2300. இது மருத்துவர்களுக்கு அல்லது மருந்துக் கடைக்கு ரூ.470க்கு கொடுக்கப்படுகின்றது. ஆக மருத்துவர்களுக்கு ரூ. 1830 லாபமாக கிடைத்துள்ளது. இப்படி மருந்து நிறுவனங்கள் மக்களை கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றன.

இது ஒரு பக்கம் இருக்க, புதிய மருந்துகள் அறிமுகம் என்கின்ற பெயரால் பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய நாட்டையும் இந்திய மக்களையும் சோதனைக்களமாக மாற்றி, கடந்த 2008-10 வரை 1660 அப்பாவி மக்களைக் கொன்று குவித்துள்ளது. இதில் பெரும் பாலானோர் மலை வாழ் மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் மத்தியப் பிரதேசத்தில் முறையற்ற சோதனையில் ஈடுபட்ட மருத்துவர்களுக்கு தலா ரூ.5000 அபராதம் விதித்துள்ளது. அதாவது தடாலில் எனும் மருந்து ஆண்களுக்கு அவர்களின் புணர்ச்சியை ஊக்குவிக்கும் மருந்தாகும். இதை ஒரு மருந்து நிறுவனம் இரத்த அழுத்த நோய்க்காக அப்பாவி மக்களிடம் அவர்களுக்கே தெரியாமல் சோதனை செய்தது. இதில் பலர் மடிந்துள்ளனர். இந்த கோர நிகழ்ச்சிக்கு காரணமான மருந்து நிறுவனங்களை மத்திய அரசு கண்டு கொள்ளவே இல்லை. இது தொடர்கதையாக இருக்கிறது.

இப்படி மருந்து நிறுவனங்கள் மக்களை கொள்ளையடித்துக் கொண்டிருக்க, மறுபுறம் அதே நிறுவனங்கள் அதில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இந்திய நாட்டு சட்டத்தில் உள்ள உரிமைகள், சலுகைகள், சமூக பாதுகாப்பு போன்றவைகளை அளிப்பதே இல்லை.

குறிப்பாக “பிகாசில்ஸ்”(Becosule) எனும் சத்து மாத்திரை தயாரிக்கும் பைசா(Pfizer) எனும் அமெரிக்க நிறுவனம் இந்தியாவில் தனது நிறுவனத்தில் தொழிலாளர்களும், மருந்து விற்பனை பிரதி நிதிகளும் இல்லை என்று தொழிலாளர் ஆணையரிடம் தெரிவித்துள்ளது. ஆனால் தொழிலாளர் அலுவலர் அவர்கள், தனது விசாரணை அறிக்கை யில் 1985 தொழிலாளர்கள் மற்றும் பிரதிநிதிகள்(Medical Rep) பணிபுரிகின்றனர் என்று தெரிவித்துள்ளார். ஆக, இந்த நிறுவனம் தொழிலாளர்களுக்கான சலுகைகள், சட்ட உரிமைகளை மறுத்து, இதுநாள்வரை இந்தியாவில் வியாபாரம் செய்து பல ஆயிரக்கணக்கான கோடிகளை அமெரிக்காவிற்கு எடுத்துச் சென்றுள்ளது. இப்படி ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து மருந்து நிறுவனங்கள் இந்திய அரசியல் சட்டத்தை மதிக்காமல் இந்தியாவில் இருக்கின்றன. இதற்கு முடிவு கட்டிடவும், மக்களுக்கு மலிவான விலையில் மருந்துகள் கிடைத்திடவும், விலை நிர்ணயப் பட்டியலில் அனைத்து மருந்துகளும் கொண்டுவர வேண்டுமெனில், மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுத்திடவேண்டும்.

மருந்து நிறுவனங்களின் வானளாவிய லாபத்தை குறைத்திட சட்டம் கொண்டு வர வேண்டும். மத்திய அரசு மருந்துகளின் அதிகபட்ச விலைகளை நிர்ணயிக்க அவசரச் சட்டம் இயற்றிட வேண்டும். அந்த சட்டங் களை அமல் படுத்திடாத நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்திட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்கள் மூலமாக மருந்து தயாரிப்பு, விநியோகத்தை ஊக்கப்படுத்திட வேண்டும். இதற்கான போராட்டங்களுக்கும், இயக்கங்களுக்கும் மக்கள் ஆதரவு தரவேண்டும்

 

குறிச்சொற்கள்:

கியூபாவின் உண்மைகள்


புரட்சிகர பூமியாம் சோசலிச கியூபாவிற்கு எதிராக அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகள், வர்த்தகத் தடைகள் பற்றி நாம் அறிவோம். உலகெங்கிலும் உள்ள அமெரிக்க ஆதரவு முதலாளித் துவ ஊடகங்கள் கியூபாவிற்கு எதிராக நடைமுறைப்படுத்தி வரும் ஊடகத்தடை நாம் அதிகம் அறியாதது.

சமீப நாட்களாக கியூபாவுக்கு எதிராக உலக ஊடகங்களில் ஒரு திட்டமிட்ட அவதூறுச் செய்தி உலா வந்துகொண்டிருக்கிறது. அந்தச் செய்தி கியூபாவை ஒரு பிசாசைப்போல வர்ணிக்கிறது. கியூபாவில் மனிதஉரிமை காலில்போட்டு நசுக்கப்படுவதாகக் கதைக்கிறது. கியூபாவில் சிறைக் கைதி ஒருவர் இறந்துபோனது குறித்தே இத்தகைய செய்திகள் பரப்பப்பட்டுள்ளன.

கடந்த நான்காண்டுகாலமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் இறந்துபோனது உண்மைதான். தனது மனைவியை பொது இடத்தில் மிகக்கொடூரமான முறையில் தாக்கிக் காயப்படுத்திய குற்றத்திற்காகவும், அவரை தடுத்து நிறுத்த முயன்ற காவல்துறையினர் மீது வன்முறைத் தாக்குதலை நடத்திய குற்றத்திற்காகவும் கைது செய்யப்பட்டு, சட்ட நடைமுறைகளின் அடிப்படையில் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில், அவருக்கு ஏற்கெனவே இருந்த உடல்நலக் குறைபாடுகளின் தொடர்ச்சியாக மூச்சுக்குழலில் தொற்று ஏற்பட்டு அனைத்து உறுப்புகளும் செயலிழந்தன. உலகிற்கே மருத்துவச் சேவை அளிக்கும் கியூபா, தனது நாட்டிலுள்ள இயல்பான குடிமக்களைப் போலவே சிறைவாசிகளையும் நடத்தி வருகிறது. அந்த வகையில் அதிகபட்ச மருத்துவ சிகிச்சையை அவருக்கு அளித்தது. எனினும் சிகிச்சை பலனின்றி கியூபாவின் மிகப்பெரிய மருத்துவமனையான சாண்டியாகோ டி கியூபா மருத்துவமனையில் காலமானார்.

இந்தச் செய்தியைத்தான், உண்மைகளை மறைத்துவிட்டு உலகெங்கிலும் எடுத்துச் செல்கின்றன முதலாளித்துவ ஊடகங்கள். ஒருபுறம் அமெரிக்கா, மறுபுறம் ஸ்பெயின், மற்றொருபுறம் சிலி என எதேச்சதிகார – ஏகாதிபத்திய ஆதரவு ஆட்சியாளர்கள் இந்த செய்தியை கையில் வைத்துக் கொண்டு கியூபாவுக்கு எதிராக விஷத்தைக் கக்கி வருகிறார்கள்.

கியூபாவில் சிறையில் இதுவரை கைதிகள் எவரும் இறந்ததில்லை. மிகக்கொடூரமான முறையில் எவரும் கொல்லப்படவில்லை. மரண தண்ட னைக் குற்றங்களே அங்கு நடக்கவில் லை. அப்படிப்பட்ட அற்புதத்தேசத்தின் மீது சேற்றை வாரி இறைக்கும் ஸ்பெ யின் ஆட்சியாளர்களுக்கும் சிலி ஆட் சியாளர்களுக்கும் ஏராளமான கேள்விக் கணைகள் காத்திருக்கின்றன.

ஸ்பெயின் மட்டுமின்றி, கியூபாவை திட்டித் தீர்க்கும் ஐரோப்பிய கூட்டாளி களின் ‘மிகவும் நாகரிகமான’ அரசுகள், தங்களது நாடுகளில் தற்போது நடந்து கொண்டிருக்கும் மகத்தான தொழிலா ளர் இயக்கங்களின் மீது, முன்னெப் போதையும் விட கொடூரமான தாக்கு தலை கட்டவிழ்த்துவிட்டிருக்கின் றனவே, ஏன்?

ஸ்பெயின் நாட்டுச் சிறைகள் நிரம்பி வழிகின்றன. அத்தனை பேரும் அந் நாட்டிற்கு வேலை தேடி ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வந்த அப்பாவிகள். கடந்தாண்டு ஜூலை மாதம் டெரூயல் எனும் நகரில் அமைந்துள்ள சிறைக் கொட்டடியில், ஒரு சாதாரண சிறைவாசி பல மாத காலம் பட்டினிப்போராட்டம் நடத்தி இறந்துபோனார். எப்படி? அவர் மொராக்கோ நாட்டிலிருந்து பிழைப்பு தேடி இங்கு வந்தவர். எந்தக்குற்றமும் செய்யாததற்காக கைது செய்யப்பட்டார். தான் ஒரு அப்பாவி என்பதை நிரூபிப் பதற்காகவே பட்டினி கிடந்து உயிர் நீத்தார். அவரது கதறலை ஸ்பானிய அதிகாரிகள் ஏறெடுத்துக்கூட பார்க்க வில்லை.

சிலி நாட்டில் சர்வாதிகாரி பினோ செட்டின் கையாட்கள்தான் ஆட்சியிலிருக்கிறார்கள். சமீபத்தில் பள்ளிப் பாடப் புத்தகங்களில் கொடூங்கோலன் பினோசெட் பற்றி புகழ்பாடும் பாடம் இடம் பெற்றதை எதிர்த்து போராட்டத்தில் இறங்கியமாணவர்கள் மீது கொடிய அடக்குமுறை ஏவப்பட்டது. பலர் மீது பயங்கரவாத தடுப்புச்சட்டம் பாய்ந்ததே?

அமெரிக்க ஆட்சியாளர்களோ மிகவும் ‘நல்லவர்கள்’.

கியூபாவின் மனித உரிமையைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

உலகிலேயே மிகமிக மோசமான முறையில் மனித உரிமை களைப் பராமரிக்கிற ஒருநாடு இருக்கிறதென்றால், அது அமெரிக்காவே என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கவுன்சிலே பளிச்சென்று சொல்லியிருக்கிறது. இந்த நாட்டின் பெண்கள் மிடுக்கான உடைகள் உடுத்தலாம்; ஆனால் ஆணுக்கு நிகரான உரிமைகள் இல்லாதவர்கள். இன ரீதியான, மத ரீதியான ஒடுக்குமுறைகளுக்கு அமெரிக்க மாகாணங்களில் ஏராளம் ஏராளம் உதாரணங்கள் மறைந்திருக்கின்றன. சிறைகள் சித்ரவதைக்கூடங்கள். இந்த நாட்டின் நீதித்துறை அடிக்கடி ‘தவறான’ தீர்ப்புகளையே வழங்கும். நீதித்துறையின் ‘தவறுகளில்’ சிக்கியவர்களுக்கு மரண தண்டனை உறுதி. உலகிலேயே சின்னஞ்சிறுவர்களையும் மன ரீதியாக பாதிக்கப்பட்டவர்களையும் கூட தூக்கிலேற்றிய பெருமைக்குரியது அமெரிக்க அரசு.

2010ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 90 சிறை வாசிகளை தூக்கில்போட்டு கொன்றிருக்கிறது அமெரிக்க நிர்வாகம். இன்னும் 3 ஆயிரத்து 220 பேருக்கு மரணக்கயிறு காத்திருக்கிறது.

கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் கலிபோர்னியாவில் உள்ள மிகப் பெரும் சிறை ஒன்றில் அனைத்துக் கைதிகளும் ஒட்டுமொத்த மாகப் பட்டினிப்போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் ஏவப்பட்டது. மூன்றுபேர் அடி வாங்கியே செத்துப்போனார்கள்.

உள்நாடு மட்டுமின்றி ஆப்கானிஸ்தான், இராக், பாகிஸ்தான், லிபியா உள்பட பல்வேறு நாடுகளில் அமெரிக்கா கொன்று குவித்த உயிர்கள் ஏராளம் ஏராளம்.

ஆனால், பேரிடர்களின் போது மட்டுமின்றி, இயல்பான காலங் களிலும் கூட பல்வேறு நாடுகளில் ஆயிரக்கணக்கான மருத்துவர் களை சேவைக்காக அனுப்பி, லட்சக்கணக்கான உயிர்களை பாது காத்துக் கொண்டிருக்கிற மகத்தான வரலாறு படைத்தது சோசலிச கியூபா.

முதலாளித்துவ ஊடகங்கள் உரைக்க மறுக்கிற உண்மை இது

 
1 பின்னூட்டம்

Posted by மேல் ஜனவரி 30, 2012 in அரசியல், டாலர்

 

குறிச்சொற்கள்:

மின்வாரியத்தைக் காப்பாற்றும் வழி


தமிழ்நாடு மின்சார வாரியம் கடுமையான நட்டத்தில் மூழ்கிக் கொண்டு இருக்கிறது என்றும், அதிலிருந்து மின்வாரியத்தை மீட்க வேண்டுமென்றால் மின்சாரக் கட்டணத்தை கட்டாயம் உயர்த்தியே ஆக வேண்டும் என்றும் அதைத்தவிர அரசுக்கு எந்த மாற்று வழியும் இல்லாததால் மக்கள் இந்தக் கட்டண உயர்வை ஏற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார் நம் முதல்வர்!
முதல்வரின் இந்த வாதத்தில் உண்மை உள்ளதா? “இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு” என்ற குறளை மனப்பாடமாக ஒப்பித்து, அதன்படி அரசாங்கத்தை நடத்துவதாக பெருமை கொள்ளும் தமிழக அரசாட்சியாளர்கள் அதன்படி மின்சாரப் பகிர்மானத்தின் மூலம் ஈட்டிய பொருளை சரிவர சேமித்து செயல்பட்டார் களா? அப்படிச் செயல்பட்ட பின்னரும் நட்டம் ஏற்பட்டு மின்வாரியம் இந்நிலைக்கு தள்ளப்பட்டதா? இவைகளுக்கெல்லாம் பதில் இல்லை என்ற ஒற்றைச் சொல்தான்! பிழை பட்ட நிர்வாக முறைகளால் ஏற்பட்ட நடை முறை நட்டங்களை ஈடுகட்டிட மிகுதியாகக் கடன் வாங்கப்பட்டது என்பதே உண்மையாகும். அது இன்று வீங்கிப் பெருத்து மின் வாரியத்தையே விழுங்க நிற்கிறது.
கடந்த 2001 ம் ஆண்டில் இதே முதல்வர் தலைமையில் அதிமுக தமிழகத்தில் ஆட்சி அமைத்தவுடன் அப்போதைய தமிழகப் பொருளாதார நிலை குறித்த ஒரு வெள்ளை அறிக்கை தயாரிக்கப்பட்டு சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. தமிழ்நாடு மின்சார வாரியம் 3589 கோடி ரூபாய் நட்டத்தில் உள் ளது என்றும், இதை சமாளித்திட மின்கட்டண உயர்வு அவசியம் என்றும், 7 தனியார் மின்உற்பத்தி நிலையங்களிடம் மின்சாரம் வாங்குவதற்காக போடப்பட்டுள்ள ஒப்பந்தங்களை மறு பரிசீலனை செய்திட வேண்டும் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட் டது. ஆனால் அந்த ஆலோசனைகள் எதுவும் அவர்களின் ஆட்சிக்காலம் முடியும் வரையிலும் நிறைவேற்றப்படவில்லை.
தமிழகத்தின் மின்தொகுப்பின் மொத்த மின்விநியோகத்தில் 25 சதவீதம் விவசாயத்திற்கும், 18 சதவீதம் தொழில்நுட்ப ரீதியிலான கம்பியிழப்பிற்கும் சென்று விடுகிறது. மீத முள்ள 57 சதவீதம் மின்சக்திதான் விலைக்கு விற்கும் மின்சாரம் ஆகும்.  வீடுகளுக்கு அளிக்கப்படும் மானிய விலையிலான மின்சாரத்தால் ஏற்படுகிற இழப்பு, தொழிற்சாலைகள் மற்றும் வணிக பயன்பாட்டாளர்களுக்கு அளிக்கப்படும் மின்சாரத்திற்கு சற்று கூடுதல் கட்டணம் நிர்ணயிப்பதின் வாயிலாக ஈடுகட்டப்பட்டு வந்தது.  இதுதான் குறுக்கு மானியம் என்றழைக்கப்படுகிறது.
விவசாயிகளுக்கு இலவசமாக மின்சாரம் அளிக்கப்படக்கூடாது என்ற வாதங்கள் பலமாக முன்வைக்கப்பட்டாலும் கூட, விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு விலை நிர்ணயிக்கும் அதிகாரத்தைப் பெறாத அப்பிரிவினருக்கு விவசாய உற்பத்திக்கான மின்சாரத்தை இலவசமாக கொடுப்பது அவசியமானதாகும்.  இந்த இலவச மின்சாரத்தால் தான் அரசின் நியாய விலைக்கடைகளில் தரமான அரிசியை மலிவு விலையில் அடித்தட்டு மக்கள் பெறமுடிகிறது.  தரிசாகப் போடப்படக்கூடிய அபாயத்தில் உள்ள பல ஹெக்டேர்களர் நிலங்கள் விளைநிலங்களாக மாறியிருக்கின்றன.  மேலும் இது நாட்டின் உயிர் நாடியான வேளாண்மை குறித்து அரசு கொண்டிருக்கும் அக்கறையில் வந்தடைந்துள்ள கொள்கை முடிவு.  ஆயினும் உண்மையான பயனாளிகளுக்கு சென்றடையும் வண்ணம் அதை முறையாக செயல்படுத்துவதும், ஒழுங்குப் படுத்துவதும் அவசியம் ஆகும்.
வரிகளின் மூலமாக அரசு ஈட்டும் வருவாயில் நிதி ஒதுக்கி, அதிலிருந்து விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் பெற்று வழங்கு வதை விட்டுவிட்டு அந்த இலவச மின்சாரத்திற்கான தொகையினை மின்வாரியத்தின் நிதிச்சுமையாக மாற்றுவது என்ன நியாயம்? தமிழக மின்துறை ஒழுங்குமுறை ஆணையம் தனது அறிக்கையில், விவசாயிகளுக்கு இலவசமாக மின்சாரம் வழங்குவதால் ஆண்டு தோறும் மின்வாரியத்திற்கு 5600 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது என்று கணக்கிட் டுள்ளது.  ஆனால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்காக மின்வாரியத்திற்கு தமிழக அரசு வழங்கும் தொகையோ ஆண்டுக்கு வெறும் ரூ.250 கோடி மட்டுமே!
மின்சார வாரியம் தமிழகத்தின் மின் தேவையை பூர்த்தி செய்துகொள்ள 7 தனியார் மின்நிலையங்களை நாடியது.  2000 ம் ஆண்டு முதல் இந்த தனியார் மின்உற்பத்தி நிலையங்கள் தமிழகத்தின் மொத்த மின் உற் பத்தியில் 9 சதவீத மின்சாரத்தை உற்பத்தி செய்து மின்வாரியத்தின் மொத்த வருமானத் தில் 35 சதவீத தொகையை எடுத்துச் சென்றன.  கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் பிள்ளைபெருமாநல்லூர் மின்நிலையம் தனது மின்நிலையத்திற்கான எரிபொருளை மாற்றிக்கொண்டது.  இதனால் இந்த மின்நிலையத்தில் இருந்து ரூ.18.54 க்கு வாங்கப்பட்ட ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை இன்று ரூ.2.30 ஆக குறைந்துள்ளது.  தனியார் மின் உற்பத்தி நிலையங்களிடம் ஆண்டிற்கு 80 கோடி யூனிட் மின்சாரம் வாங்குவதற்கு வாரியம் செலவிடும் தொகை ரூ.8000 கோடி ஆகும். இதே போல கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்பட்ட மின்பற்றாக்குறையினால் வெளி மாநிலங்களிலிருந்தும் தனியாரிடமிருந்தும் வாங்கிய மின்சாரத்திற்கு செலுத்திய தொகையும் அதிகம்.
1998 ம் ஆண்டுகளில் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட மின்நிலையங்களை தனியார் கட்டுமானம் செய்யாமல் கைவிட்ட காரணத்தினால் 2006 ம் ஆண்டில் தமிழக அரசே மின் உற்பத்தி திட்டங்களை மேற்கொள்ள வேண்டியதாயிற்று.  தற்கான நிதி ஆதாரங்கள் மின்வாரியத்திடம் இல்லாத காரணத்தினால் மத்திய அரசின் நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்றது. அதன்மூலம் வட சென்னை, மேட்டூர் அனல் மின்நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.  பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்காக வாங்கிய கடன்களுக்கு தொடர்ந்து வட்டி செலுத்த வேண்டியுள்ளது.  இன்று மின்சார வாரியம் தான் வாங்கிய கடன்களுக்காக மட்டும் ஆண்டிற்கு ரூ.5000 கோடியை வட்டியாகச் செலுத்தி வருகிறது. மின்வாரியத்திடம் வட்டியை பெறுகின்ற நிறுவனங்கள் அனைத்துமே மத்திய அரசின் நிதி நிறுவனங்கள் ஆகும்.
ஆனால் மின்நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை தமிழக மின்சார வாரியத்திற்கு மத்திய அரசின் நிறுவனமான கோல் இந்தியா தான் வழங்கி வருகிறது. ஒரிசா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து ரயில்வேத்துறை மூலமாக அனல்மின் நிலையங்களுக்கு நிலக்கரி கொண்டு வரப்படுகிறது.

மத்திய அரசின் மின் தொகுப்பில் இருந்து மாநிலங்களுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. அதற்கான மின்சார கட்டணத்தை மத்திய அரசின் மின்உற்பத்தி நிறுவனங்கள் பெற்றுக்கொள்கின்றன. இதிலும் மத்திய அரசு ஒரு வியாபாரியைப் போலத்தான் நடந்து கொள்கிறது. காயம்குளத்தில் இருந்து வழங்கப்படும் ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூ.9.40 ஐ விலையாக பெற்றுக் கொள்கிறது. இதன் வழியாக மாநில மின்வாரியங்களின் ஒரு பகுதி வருமானம் மத்திய அரசின் கைகளுக்குச் செல்கிறது. தான் அளித்த நிதியை வட்டியோடு திரும்பப் பெற பல்வேறு மக்கள் விரோத ஆலோசனைகளை வழங்கும் உலக வங்கியைப் போலவே மத்திய அரசும் மாநிலங்களிடம் பல்வேறு நிபந்தனைகளைப் போடுகிறது. அண்மையில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக்குழு கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங், மாநில அரசுகள் மின்கட்டணத்தை உயர்த்தினால் மட்டுமே வளர்ச்சிக் குரிய நிதியை அளிக்க முடியும் என்று நிபந்தனை விதித்துள்ளார்.  தமிழக மின்வாரியத்தை கடன் சுமையிலிருந்து மீட்டெடுக்க பிரதமர் மன்மோகன்சிங் கிடம் தமிழக முதல்வர் ரூ.45000 கோடி தேவை என்று கோரிக்கை வைத்தார். அதற்கு மவுனம் தான் பதிலாக அளிக்கப்பட்டது. ஆனால் சீமைச் சாராய வணிகன் விஜய்மல்லையாவின் கிங்பிஷர் விமானநிறுவனம் தனக்கு ரூ.8000 கோடி நஷ்டம் ஆகிவிட்டது என்று கணக்குக் காட்டியுள்ள செய்தி வெளிநாட்டில் உள்ள பிரதமர் காதில் விழுந்தவுடன் உடனடியாக அதற்கு உதவ வேண்டும் என்று பாசத்தோடு பேசுகின்றார். யாருக்கான பிரதமர் அவர்? யாருக்கானது அவரது அரசு?
இன்றைக்கு மத்தியில் ஆளக்கூடிய காங்கிரஸ் அரசு, தமிழக அரசு கேட்கின்ற நிதியை அளிக்கவில்லை என்று தமிழகத்தில் பாஜக மாநிலக்குழு போராட்டம் நடத்துகின்றது. ஆனால், இதே பாஜக மத்தியில் ஆளும் கட்சியாக இருந்த பொழுது மின்சார சட்டம்-2003ஐ நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது. இச்சட்டம் கொண்டு வந்ததின் காரணமாக மாநில மின்வாரியங்கள் பிரிக்கப்பட்டன. இச் சட்டத்தை ஏற்று மாநில மின்வாரியங்கள் செயல்பட்ட காரணத்தினால் இன்றைய அளவில் அவை 3 லட்சம் கோடி ரூபாய் நஷ்டத்தில் உள்ளதாக மத்திய ஒழுங்குமுறை ஆணையம் செய்தி வெளியிட்டுள்ளது.
எனவே ஆளும் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் கடைப்பிடித்த பொருளாதாரக் கொள்கைகள் தான் மாநில மின்வாரியங்கள் நஷ்டத்தில் செயல்படுவதற்கான காரணமாகும். ஆனால் இதே காலத்தில் மின்சாரத்தை வாங்கி விநியோகம் செய்யும் டாடா, ரிலையன்ஸ் நிறுவனங்கள் லாபத்தில் கொழிக்கின்றன. இவைகளையெல்லாம் பட்டியலிட்டு அதற்காக மின்கட்டண உயர்வை மக்கள் மீது சுமத்த வேண்டியது அவசியம் என்று தமிழக அரசு நியாயப்படுத்த வேண்டியதில்லை. அதற்கு பதிலாக மத்திய அரசை நெருக்கி தமிழக அரசு பெற வேண்டிய உரி மைகளைப் பெற்றாலே நட்டத்தை ஈடுகட்டி மின்கட்டண உயர்வைத் தவிர்க்க முடியும். ஏழு தனியார் மின்உற்பத்தி நிலையங் களிடம் மின்சாரம் வாங்குவதற்காக போடப் பட்ட ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு, அந் நிறுவனங்களை அரசே ஏற்க வேண்டும்.
மத்திய அரசின் நிதிநிறுவனங்கள் மாநில மின்வாரியங்களுக்கு அளித்துள்ள கடன்களுக்கான வட்டியை மத்திய அரசே ஏற்கவேண்டும்.  தமிழக மின்வாரியம் விவசாயிகளுக்கு இலவசமாக அளிக்கின்ற மின்சாரத்திற்கான கட்டணத்தை தமிழக அரசானது முழுமையாக தமிழக மின்வாரியத்திற்கு ஆண்டுதோறும் நிலுவைகளின்றி அளித்திட வேண்டும். கடந்த 10 ஆண்டுகளின் நிலுவைத் தொகைகளையும் சேர்த்து அளித்திட வேண்டும்.
இவைகளைச் செய்தாலே தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவ சியமில்லை. மின்கட்டண உயர்வினால் முதலாளிகளின் பையில் நிதியைக் கொண்டு சேர்க்க வேண்டியதில்லை. இவைகளைச் சீர்படுத்தாமல் மின்பற்றாக்குறையை சமாளிக்கும் நோக்கில் மின்கட்டண உயர்வின் மூலம் பல கோடிகளை மக்களிடமிருந்து பறித்து தனியார்களிடம் மின்சாரம் வாங்கச் செலவிட்டு, மின்வெட்டில்லாத தமிழகம் என்று தம்பட்டம் அடிக்கும் அரசியல் சித்துவிளையாட்டுகளில் அரசு ஈடுபடுமானால் தமிழக மின்சார வாரியம் மட்டுமல்ல, மக்களும் திவாலாகிப் போவார்கள். அல்லல்படுவோரின் துயர்மிகு கண்ணீர் பெரும் படைகளையே தேய்த்து அழிக்கும் ஆற்றல் கொண்டது என்பதை அரசுகள் உணர்ந்து செயல்பட வேண்டும். அதைவிடுத்து வெறும் மின் கட்டண உயர்வினால் மட்டும் மின்வாரியத்தை காப்பாற்ற முடியும் என நம்பிச் செயல்படுவது அறிவார்ந்த செயல் அல்ல!

 
பின்னூட்டமொன்றை இடுக

Posted by மேல் திசெம்பர் 2, 2011 in அரசியல்

 

குறிச்சொற்கள்:

‘பல்கலைக்கழகங்களைக் கைப்பற்றுவோம்’ அமெ. மாணவர்கள் போராட்டம்


அமெரிக்காவில் நடைபெற்று வரும் கைப்பற்றுவோம் போராட்டங்களின் ஒருபகுதியாக அந்நாட்டு மாணவர்களும் தங்கள் போராட்டங்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்தப் போராட்டங்களுக்கு எதிராக காவல்துறை நடத்தும் வன்முறை நடவடிக்கைகள் மற்றும் கல்விக்கான பட்ஜெட்டில் வெட்களுக்கான முயற்சிகள் ஆகியவற்றிற்கு எதிராக மாணவர்கள் குரல் எழுப்பி வருகிறார்கள்.  நவம்பர் 28 அன்று முழுமையான வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுப்பது குறித்து மாணவர்கள் கலந்து கொண்ட பிரம்மாண்ட பேரவை நடைபெற்றது. அதில் பங்கேற்ற மாணவர்கள் வேலைநிறுத்தம் செய்வதற்கு ஒப்புதல் அளித்தனர்.
உயர்கல்வி பற்றிய அரசின் அணுகுமுறை அத்துறையை சீரழித்துவிடும் என்றும், மக்களின் போராட்டங்கள் மீதான காவல் துறையின் அடக்குமுறையைக் கண்டிக்கிறோம் என்றும் அந்தப் பேரவையில் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் அனைத்து வளாகங்களும் அன்றைய தினம் இயங்காது என்று மாணவர் அமைப்புகள் எச்சரித்துள்ளன.
மாணவர்கள் அமைப்புகள் வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்திருக்கும் நவம்பர் 28 அன்று தான், பட்ஜெட்டில் கடுமையான வெட்டுகளை மேற்கொள்வது பற்றி கலிபோர்னியா பல்கலைக்கழக நிர்வாகிகள் கூடிப் பேசுகிறார்கள். மாணவர்களின் கல்விக்கட்டணமும் அதே நாளில் கடுமையாக ஏற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முன்மொழிவுகளை மாணவர்கள் முழுமையாக எதிர்க்கிறார்கள் என்பதை வேலை நிறுத்தம் காட்டும் என்பது மாணவர் அமைப்புகளின் கருத்தாகும்.
போராடும் மாணவர்கள் மீது மிளகுத்தூளைத் தூவியதற்கும் அமைப்புகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன. அந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியதால் இரண்டு காவல்துறை அதிகாரிகள் நிர்வாக ரீதியான விடுப்பில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

 
பின்னூட்டமொன்றை இடுக

Posted by மேல் நவம்பர் 25, 2011 in டாலர்

 

குறிச்சொற்கள்:

கார்கில் ஊழல் – இதுவரை ஒரு குற்றவாளி கூட கைது இல்லை


கடந்த 1999ம் ஆண்டு கார்கில் போர் மேற்கொண்டபோது மத்திய அரசு பெருமளவு பாதுகாப்புக் கருவிகளை வாங்கியது. இந்த கருவிகளை கொள் முதல் செய்ததில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்தது. இந்த கார்கில் ஆயுத கொள் முதல் ஊழல் தொடர்பாக கடந்த 12ஆண்டுகளாக மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குற்றவாளிகள் யார் என்பதும் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்ற விவரமும் தெரியவில்லை.
கார்கில் ஊழல் குறித்து மத்திய அரசு எந்தவித நட வடிக்கையும் எடுக்காதது குறித்து நீதிமன்றத்தில் சட்ட உதவி அளிக்கும் நிபுணர்களாக உள்ள மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி சுட்டிக் காட்டினார். இதனைத் தொடர்ந்து நீதிபதி அப்தாப் ஆலம் தலைமையிலான பெஞ்ச் மத்திய அரசை கண்டித்து கூறுகையில், இந்த வழக்கில் நாங்கள் மிகக் கடுமையாக இருக்க விரும்பவில்லை. ஆனால் இது போன்ற அமைதியாக செல்ல முடியாது என எச்சரித்தது. மத்திய அரசின் நட வடிக்கை எங்களுக்கு திருப்தி தரவில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. கார்கில் ஊழல் தொடர்பாக அரசு சார்பில் நடவடிக்கை எடுப்பதற்கு அரசியல் உறுதி இல்லாத நிலை விவரத்தை திவேதி சமர்ப்பித்தார்.
கார்கில் போரின்போது ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் ஆயுதங்கள், ராணுவத் தளவாடங்கள் வாங்கப் பட்டன. இந்தக் கொள்முதலின் போது ஏராளமான குறைபாடுகள் இருப்பதை தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அலுவலகம் (சிஏஜி) தனது அறிக்கையில் குறிப்பிட்டது இந்த வழக்குத் தொடர்பாக நீதிமன்றம் சிறிது நேரம் விசாரணை செய்த பின்னர், விசாரணையை நவம்பர் 28ம் தேதிக்கு தள்ளி வைத்தது.
பாஜக கூட்டணி அரசு ஆட்சியின் போது கார்கில் போரான ‘விஜய்’ நடவடிக்கைக்காக பாதுகாப்பு ஆயு தங்கள் கொள்முதல் செய்யப்பட்டன.  இந்தக் கொள் முதலில் நடந்த பெரும் ஊழல் குறித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்குத் தொடர்பாக நீதிமன்றம் விசாரணை செய்து வருகிறது. 35 விவகாரங்களில் குறைபாடு இருப்பதை சிஏஜி கண்டு பிடித்தது. இருப்பினம் பாதுகாப்புத் துறை 28 விவகாரங்களில் உரிய ஆதாரம் இல்லை என ராணுவ அதிகாரிகள் மீது விசாரணை நடத்துவதற்கு ஒப்புதல் அளிக்க மறுத்தது. பாதுகாப்புத் துறை நட வடிக்கைக்கு உச்சநீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்தது

 

குறிச்சொற்கள்: